Friday, July 1, 2016

If I had Wings..!! - By Ramarajan Subburaj

எனக்குச் சிறகுகள் இருந்தால்...
If I had Wings..!!

பறப்பேன்..
பறவைகள் போலே பறப்பேன்..
அந்தக் கோபுரங்கள் தாண்டிப் பறப்பேன்..
மென்மை கொண்ட மேகங்கள் ஊடே பறப்பேன்..
வானுயரப் பறப்பேன்..



பறப்பேன்
மண்ணைக் கூறு போடும் மனிதர்கள் விட்டு
மனம் வருந்திப் பறப்பேன்.
ஒற்றுமை உரக்கச் சொல்லும் பறவைகளோடு
ஒய்யாரமாய்ப் பறப்பேன்.
உலகமே ஒன்று தான் என்று சொல்லிப் பறப்பேன்.
எத்திசையும் என் இசையோடு பறப்பேன்.

பறப்பேன்..
தாகம் தீர்க்கும் தண்ணீர் தேடிப் பறப்பேன்.
ஓடும் ஆறும் ஓடையும்,
கடலும் ஏரியும் குளமும்
எனதெனப் பறப்பேன்.
இவற்றின் கல்லறையில்
கட்டி எழுப்பும்
நரகம் தாண்டிப் பறப்பேன்.

தானழுத கண்ணீரில்
வெள்ளம் சூழ் நரகம் விட்டு
விருட்டெனப் பறப்பேன்.
உதவி மேல் உதவி செய்யும்
மனிதம் தேடிப் பறப்பேன்.
உயிரிழப்பில் அரசியல் செயும்
வீணர்கள் வெறுத்துப் பறப்பேன்.

தேம்பி அழும் குழந்தையின்
பசிபோக்கும் இரை தேடிப் பறப்பேன்
ஏதுமறியா என் இனத்தின்
மறுவாழ்வு தேடி
நான் பறப்பேன்

பொறுமை இல்லாப் போராளிகள்
போகும் வழி மறிக்கும்
போக்குவரத்து நெரிசல் கண்டால்
சிறகுகள் விரித்தே நான் பறப்பேன்

சில்லென்ற காற்றில்
சிலாகித்து நான் பறப்பேன்
பதின்மடங்கு செலவாகும் பயணம் இன்றி
பறவையாய்ப் பறந்து செல்வேன்

பாஸ்போர்ட் இல்லாப் பயணம் செய்வேன்
தேசங்கள் கடந்து நான் பறந்து
சமாதானச் சேதி சொல்வேன்.

எனக்கு மட்டும் சிறகுகள் இருந்தால்...



Ramarajan Subburaj | ramarajanengg@gmail.com

No comments:

Post a Comment